ஸ்ரீ தனஜெயம் அறக்கட்டளைக்கு வரவேற்கிறோம்
அன்பால் தொடங்கும் சேவை, நம்பிக்கையால் வளர்கிறது 

பதிவு எண்: BK 04/02/2026 | தஞ்சாவூர்

Latest Post

அறங்காவல் நிறுவனத்தில் குறிக்கோள் :

1.ஜாதி, மத, பேதமற்ற சமுதாயத்துக்கு சமுதாய முன்னேற்றம் சமுதாய நீதி, எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் உதவுவதே.

2.ஏழை, எளிய மக்கள் உடல் ஊனமுற்றோர் வாழ்வில் நலிந்தோர், ஆகியோர்களுக்காக கல்வி நிறுவனங்கள் அமைத்தல், பொருளாதார வசதி செய்து கொடுத்தல்.

3.ஆதரவு அற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லம், விதவை மறுவாழ்வு இல்லம், ஆதரவற்ற பெண்கள். ஆதரவற்ற ஏழைகள் ஆகியோர்களுக்காக இல்லங்கள் அமைத்தல்.

4.சாதி, மத, பேதம், இன வேறுபாடு இன்றி, எல்லோருக்கும் இலவச மருத்துவமனைகள் ஏற்படுத்தல், மருத்துவ சிகிச்சை அளித்தல்

5.நூலகம் அமைத்தல் , தொழில் கல்விக் கூடம் நிறுவுதல். வழி பாட்டு தலங்கள், சமுதாயக் கூடம் அமைத்தல்,சமூக சீர்திருத்த கூடம் அமைத்தல், தியான கூடம் அமைத்தல்.

6.அறக்கட்டளைக்காக கட்டிடம் கட்டுதல், நிறுவனத்திற்கு வேறு சொத்துக்களை தானம் எடுத்தல் பிற மருத்துவமனைகள், கல்வி தொழில்கல்வி, மருத்துவ நிறுவனங்கள் வழிபாட்டுக் கூடங்கள். ஆதரவற்ற, ஊனமுற்ற, கண் பார்வையற்ற, காது கேளாமை, வாய் பேசாமை, மனநல பாதிப்பு. ஆதரவற்ற பெண்கள் ஆகியோர்களுக்காக நிறுவனங்கள் நிறுவுதல்.

7. இலவச மருத்துவமனைகள் நலவாழ்வு விடுதிகள், உதவி முகாம்கள் முதலியன கைதேர்ந்த கலைஞர்கள், ஆசிரியர்கள் முதலியவர்களைக் கொண்டு நடத்துதல்.

8. உள்நாடு, வெளிநாடுகளில் படிக்கும் சிறந்த அதிகமதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல். கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக தகுதிபெற்ற மாணவர்களுக்கு உதவுதல், ஊக்கமளித்தல், தொழில் சம்மந்தப்பட்ட கல்வி வழிகாட்டுதல் மற்றும் இலக்கியம், மொழி. ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல்.

9. தங்கும் விடுதிகள், மாணவர்கள் தங்கி படிக்கும் கூடங்கள் விதவை,ஆதரவற்ற முதியோர் ஆகியோர்களுக்காக நிறுவனங்கள் ஏற்படுத்துதல், மற்ற வேறு கூடங்களை தத்தெடுத்தல், பராமரிப்பு செய்தல், உதவித்தொகை வழங்குதல் முதலியன.

10. மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்களுடன் நடத்தி வருகின்ற. வேறு நிறுவனங்களுக்கு பொருளாகவோ, பணமாகவோ உதவி செய்தல்.

11. ஏழை,எளிய மக்களுக்கு உணவு, உடை. வழங்குதல் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களில் திருமணம் செய்து வைத்தல், கூட்டத் திருமணங்கள் (குரூப் மேரேஜ்) சமுதாய பழக்க வழக்கங்களுடன் இணைந்த முறையில் எளிய திருமணங்களை நடத்தி வைத்தல்.

12. தமிழ் மொழி வளர்ச்சிக்காக குழுக் கூட்டங்கள். மீட்டிங். செமினார், சிம்போஸியம் (ஆராய்ச்சிக் கூட்டங்கள்). சொற்பொழிவு முதலியன நடத்துதல் பாரம்பரிய வளர்ச்சி. சமுதாய பழக்க வழக்கங்களோடு ஒருமித்து, நம்பிக்கைகளை ஒழித்தல் முதலியவற்றிற்கு ஏற்பாடு செய்தல், கோவில்களில் உழவார திருப்பணி செய்தல்.

13. நீதி, நியாயங்களுக்கு உட்பட்டு மேலே கூறிய குறிக்கோள்களை அடைவதற்காக பரிசுப் அன்பளிப்பு உதவித்தொகை, பொருள்களுடன் கூடிய நிதி ஆதாரத்தை பெருக்குதல்.

14. எந்தவொரு குறிப்பிட்ட துறையிலும் மிகச் சிறந்து விளங்கும். விளங்கிய, தேர்ச்சிபெற்ற மாணவ மாணவிகளுக்கு தலைமைப் பண்பு, நிறுவன பயிற்சி அளித்தல், பரிசுத் தொகை, கோப்பைகள் வழங்குதல் மற்றும் சமுதாய மேம்பாட்டுக்காக திறமையாக உழைத்த பெரியோர்களையும் போற்றிக் கௌரவித்தல்.

15.இயற்கை வளங்களை பாதுகாத்தல், சுற்றுச் சூழல் நச்சுத் தன்மை ஒழித்தல், மரம், செடி, கொடி வளர்த்தல் முதலியவற்றுக்காக மாநில, தேசிய அளவில் இயங்கும் நிறுவனங்களோடு ஒற்றுமையாக ஒருங்கிணைந்து மேற்படி காரியங்களுக்காக பாடுபடுதல்.

16. லாப நோக்கு இல்லாது பொதுநல நோக்கோடு, கூடிய மற்ற பல காரியங்களைச் செய்ய ஊக்குவித்தல், ஈடுபடுத்துதல்.

17. அறக்கட்டளைக்கு வந்து சேரும் அசையும், அசையா பொருள்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை மேலே கூறப்பட்ட காரியங்களுக்கு மட்டும் உபயோகப்படுத்திக் கொள்ளுதல்.

18. பெருந்தன்மையோடு கூடிய தர்மம், கருணைக் காரியங்கள் யாவும், இந்திய வருமான வரிசட்டம் 1961க்கு உட்பட்ட பொருளடக்கம் ஆகும்.

19.அனைத்து கோயில்களுக்கும், ராஜகோபுரம் கட்டுதல், சீரமைத்தல், பாதுகாத்தல், ஆகிய அனைத்து செயல்களையும் செய்தல்.

20.அனைத்து கோயில்களையும், இந்து சமய அறநிலையத்துறை இடம் இருந்து அனுமதி பெற்று, கோயில்களை பாதுகாத்தல், சீரமைத்தல், ஆகிய அனைத்து செயல்களையும் செய்தல்.

Scroll to Top